இலங்கையில் பெண்ணொருவர் கொடூரக் கொலை! சிக்கிய இரு சகோதரர்கள்
களுத்துறை - ஹொரணை, சிரில்டன்வத்தை பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் நேற்றையதினம் (24-08-2024) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவத்தில் சிரில்டன்வத்தை, மீவனபாலன பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபருக்கும், அவருடைய வீட்டுக்கு அருகில் வசித்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக உயிரிழந்தவர் மற்றும் அவரது சகோதரரால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் கானன்வில பிரதேசத்தில் வசிக்கும் 40 மற்றும் 44 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.