ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் நாளை அடையாள வேலைநிறுத்தம்
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நாளை (10) ரயில் சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்று ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இரவு நேர ரயில்கள் அவற்றின் இலக்குகளை சென்றடையும் என்றும், ஆனால் நாளை காலை ஆரம்பமாகும் ரயில்களுக்காக பணிக்கு சமூகமளிக்காமல் இருக்க தங்களது சங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அச்சங்கத்தின் செயலாளர் ருக்மால் பண்டார தெரிவித்தார்.

இதன்படி, நாளை 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்து ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் ருக்மால் பண்டார மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"ரயில்வே பாதுகாப்பு விதிகளை மீறி, ரயில்வே திணைக்களத்தின் சொத்துக்கள் மற்றும் பயணிகளின் உயிர்களை ஆபத்துக்குள்ளாக்கி, திணைக்களத்தின் விதிகளை எவ்விதத்திலும் பொருட்படுத்தாமல், ரயில்வே கிரேன் வாகனங்கள் கடந்த சில நாட்களாக இயக்கப்பட்டுள்ளன.
இந்த நிலைமை மீண்டும் ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என கடந்த சில நாட்களாக நாங்கள் அறிவித்திருந்தோம். ஆனால், அந்த அறிவிப்பை அலட்சியப்படுத்திவிட்டு, மீண்டும் இரண்டு சந்தர்ப்பங்களில் அவை இயக்கப்பட்டுள்ளன.