ஒரு சிறிய கிராம்பில் இவ்வளவு நன்மைகளா?
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, தினமும் பல வித நோய்கள் நம்மை ஆட்கொள்கின்றன. இவற்றின் தீர்வுக்காக பல வித மருந்துகளை உட்கொள்கிறோம். ஆனால், இவற்றால் நிவாரணம் கிடைத்தாலும் பல பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.
பெரும்பாலான நோய்களுக்கு நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் தீர்வு மறைந்துள்ளது என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
சமையலறையில் நாம் தினமும் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்கள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல கடுமையான நோய்களுக்கு ஒரு சஞ்சீவியாகவும் செயல்படுகிறது. இந்த மசாலாப் பொருட்களில் ஒன்று கிராம்பு.
கிராம்பு பல ஆண்டுகளாக ஆயுர்வேதத்தில் நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. வயிறு வலி முதல் பல்வலி போன்ற பல வலிகளுக்கான நிவாரணமாகவும் உள்ளது.
அத்தகைய மருத்துவ குணம் கொண்ட கிராம்பின் அற்புத நன்மைகளை பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
மன ஆரோக்கியம்
கிராம்பில் மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தை போக்கி, மூளையை சுறுசுறுப்பாக்க உதவும் பண்புகள் உள்ளன என்பது மிகச் சிலருக்கே தெரியும் ஆகையால் மன அழுத்தம் நீங்க கிராம்பு டீ குடிப்பது நன்மை பயக்கும்.
செரிமான ஆரோக்கியம்
உணவு உண்ட பிறகு ஒரு கிராம்பை மென்று சாப்பிடுவது வயிற்று உப்புசம், வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது. இதனால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது.
பல் வலியை போக்கும் வலி நிவரணி
கிராம்பு வாய் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. கிராம்பு எண்ணெய் வாய் புண்கள் மற்றும் பல்வலிக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதனை உட்கொள்வதால் வாய் துர்நாற்றமும் நீங்கும்.