அவுஸ்ரேலியாவில் உயரிய விருதை வென்ற ஈழத்தமிழர்; குவியும் வாழ்த்து!

Sri Lanka Refugees Sri Lankan Tamils Tamil diaspora Australia
By Sulokshi Apr 16, 2026 01:11 PM GMT
Sulokshi

Sulokshi

Report

   அவுஸ்ரேலியாவிற்கு புலம்பெயர்ந்து சென்ற ஈழத்தமிழர் சக்திதரன் அவர்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்ற Windham-Campbell விருதினை வென்றுள்ளமை புலம்பெயர் தமிழர்களுக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ள 2நிலையில் அவருக்கு பாராடுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றது.

Windham-Campbell விருது மட்டுமல்லாது அத்துடன் 175000 டாலர் (5.5 கோடி ரூபா) பரிசாக கிடைத்துள்ளது. அவுஸ்ரேலிய அரசு சக்தி அவர்களுக்கு குடியுரிமை வழங்கியதுடன் அவர் ஈழத்தின் வலிகளை நாடகமாக அரங்கேற்ற அனுமதி அளித்து பரிசு பெற வாய்ப்பும் வழங்கியுள்ளது.

அவுஸ்ரேலியாவில் உயரிய விருதை வென்ற ஈழத்தமிழர்; குவியும் வாழ்த்து! | Windham Campbell Win Srilankan Tamil

எங்கள் கதைகள் உலக அரங்கில் அங்கீகரிக்கப்படுவது பெருமையாக உள்ளது

ஈழத் தமிழர் புலம்பெயர்ந்து சென்ற நாடுகளில் எல்லாம் குடியுரிமை வழங்குவதுடன் அவர்கள் சாதனை செய்யவும் அந் நாடுகள் வாய்ப்பு வழங்குகின்றன. எஸ். சக்திதரன் (சக்தி), சர்வதேச அளவில் புகழ்பெற்ற Windham-Campbell விருதினை வென்றுள்ளார்.

போருக்கு மத்தியிலும் அடங்காத ஈரான்; பெண் உட்பட நால்வருக்கு மரண தண்டனை; சர்வதேசம் கடும் கண்டம்

போருக்கு மத்தியிலும் அடங்காத ஈரான்; பெண் உட்பட நால்வருக்கு மரண தண்டனை; சர்வதேசம் கடும் கண்டம்

நாடகத் துறையில் இவரது சிறந்த பங்களிப்பிற்காக 1,75,000 அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களின் புலம்பெயர் வாழ்வியலை மையமாக வைத்து இவர் எழுதிய Counting and Cracking என்ற நாடகம் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

1983ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இனக்கலவரத்திற்குப் பிறகு இவரது குடும்பம் ஆஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்தது. தனது வெற்றி குறித்துப் பேசிய சக்தி, "எங்கள் கதைகள் உலக அரங்கில் அங்கீகரிக்கப்படுவது பெருமையாக உள்ளது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவில் உயரிய விருதை வென்ற ஈழத்தமிழர்; குவியும் வாழ்த்து! | Windham Campbell Win Srilankan Tamil

தற்போது இலங்கையில் The Laugh of Lakshmi என்ற தனது முதல் திரைப்படத்தைப் படமாக்கி வருகின்றார். ஆஸ்திரேலிய நாடகத் துறையில் ஆசிய மக்களின் கதைகளை ஆழமாகப் பதிவு செய்யும் சக்தியின் எழுத்துக்கள், நவீன ஆஸ்திரேலியா குறித்த புதிய பார்வையை உலகிற்கு வழங்குகின்றன.

இவரது நாடகங்கள் ஏற்கனவே விக்டோரியன் இலக்கிய விருது உட்படப் பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளன. சக்தியின் மற்றொரு படைப்பான The Jungle and the Sea, இலங்கை உள்நாட்டுப் போரின் வலிகளைப் பதிவு செய்தது.

எட்டு வங்கிக் கணக்குகளில் 930 பில்லியன் ரூபாய் ; CID இல்முறைப்பாடு!

எட்டு வங்கிக் கணக்குகளில் 930 பில்லியன் ரூபாய் ; CID இல்முறைப்பாடு!

இவரது அண்மைக்கால படைப்பான The Wrong Gods மற்றும் சுயசரிதை புத்தகமும் வாசகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த விருது ஒரு எழுத்தாளரின் ஒட்டுமொத்தப் படைப்புகளையும் ஆய்வு செய்து, ரகசியமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே வழங்கப்படுகிறது.

இந்த அங்கீகாரம் தனது கலைப் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல பெரும் உதவியாக இருக்கும் என சக்திதரன் தெரிவித்துள்ளார். அதேவேளை புலம் பெயர்ந்து வேறு நாடுகளில் வசித்துவரும் ஈழத்தமிழர்களுக்கு வெளிநாடுகள் குழ்டியிருமை வழங்கியுள்ள நிலையில், இந்திய அரசு மட்டும் ஈழத் தமிழரை 40 வருடமாக அகதியாகவே வைத்திருக்கிறது.

இலங்கையில் பெரும் சோகம்; தந்தையை காப்பாற்றச்சென்று பலியான மூன்று மகன்கள்

இலங்கையில் பெரும் சோகம்; தந்தையை காப்பாற்றச்சென்று பலியான மூன்று மகன்கள்

தேர்தல் வரும்போதெல்லாம் எல்லா கட்சிகளும் ஈழத் தமிழருக்கு குடியுரிமை பெற்றுக் கொடும்போம் என வாக்குறுதி அளிப்பதும், தொப்புள் கொடி உறவுகள் என  கூறுவதும்,   தேர்தல் முடிந்த பின்பு ஆட்சியில் இருக்கும்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மறந்துவிடுவதுமாகவே உள்ளது.

மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US