மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்; பொலிஸார் இராணுவம் குவிப்பு
அரச மருத்துவ பீடங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரியும், புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மருத்துவ பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
கொழும்பு, விகாரமகாதேவி பூங்காவில் இருந்து சுகாதார அமைச்சை நோக்கி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வாகன நெரிசல்
இந்த ஆர்ப்பாட்டத்தினை கட்டுப்படுத்தும் வகையில் ஏராளமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக, கொழும்பு தாமரைத் தடாக சந்திக்கு அருகில் உள்ள ஹோர்டன் பிளேஸில் தற்போது வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.