தென்னிலங்கையில் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் இருவர் கைது
களுத்துறை பேருவளை பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை திருடியதற்காகவும், திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்ததற்காகவும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
கடந்த 5 ஆம் திகதி வீடு ஒன்றை உடைத்து சுமார் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கற்கள் திருடப்பட்டதாக பேருவளை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
வீடுகளை உடைத்து சொத்துக்களைத் திருடியதற்காக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹெட்டிமுல்லவைச் சேர்ந்த 41 வயதானவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் திருடப்பட்ட மாணிக்கக்கற்களை விற்பனைக்காக பேருவளைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குக் கொடுத்திருந்த நிலையில், திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்ததற்காக பல்வேறு அளவிலான 106 மாணிக்கக்கற்களுடன் அந்நபரும் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் குறித்து பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.