அட்சய திருதியை நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை ; நகை வாங்கவிருப்பவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (18) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,831 டொலராகக் உள்ளதுடன், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 80 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.
இந்தநிலையில் இலங்கையிலும் இன்று (18) தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் (18) தங்க விலை 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 402,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.