தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் தெரிவு குறித்து நபரொருவர் முகநூலில் வெளியிட்ட பதிவு!

Sri Lankan Tamils Parliament of Sri Lanka Ilankai Tamil Arasu Kachchi M A Sumanthiran
By Shankar Nov 18, 2024 07:15 PM GMT
Shankar

Shankar

Report

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம், வன்னித் தேர்தல் தொகுதியின் வவுனியா மாவட்டத்தில் நின்று போட்டியிட்டு தோல்வியுற்ற, வைத்தியர் ப.சத்தியலிங்கத்திற்கு, தமிழரசு கட்சியின் அரசியற்குழுவின் முடிவுக்கு அமைய வழங்கப்பட்டுள்ளது என, அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்திருக்கிறார்.

இனிவரும் 5 வருடங்களில் நான் யார் என்பதை பார்ப்பீர்கள்! தமிழ் எம்.பி வெளியிட்ட தகவல்

இனிவரும் 5 வருடங்களில் நான் யார் என்பதை பார்ப்பீர்கள்! தமிழ் எம்.பி வெளியிட்ட தகவல்

இவ்வாறான நிலையில் தமிழரசு கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட, தேசியப் பட்டியல் வேட்பாளர் ப.சத்தியலிங்கத்திற்கு எனது வாழ்த்துக்களை பதிவு செய்வதாக சிவனடியான் சுவாமி சங்கரானந்தா முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் தெரிவு குறித்து நபரொருவர் முகநூலில் வெளியிட்ட பதிவு! | Tamil Arasu Kachchi Sumanthiran P Sathiyalingam

அவர் முகநூலில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நான் சென்ற பதிவில் பரிந்துரைத்ததன் படி, வடக்குக் கிழக்கின் 8 மாவட்டங்களில் தமிழ் தேசிய பிரதிநிதித்துவத்தை இழந்து நிற்கும் வவுனியா மாவட்டத்திற்கு, அந்த தேசிய பட்டியல் கிடைத்துள்ளது என்பதில் திருப்தியே என்றாலும் கூட,

யாழ்.கற்கோவளத்தில் உள்ள இராணுவ முகாமிற்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு!

யாழ்.கற்கோவளத்தில் உள்ள இராணுவ முகாமிற்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு!

அது அந்த வவுனியா மாவட்டத்தில் உள்ள தகுதி உள்ள பெண் ஒருவருக்கு வழங்கபட்டு இருந்தால், இந்த சிவனடியான் இன்னும் பூரண திருப்தியைக் கொண்டு இருப்பேன்.

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் தெரிவு குறித்து நபரொருவர் முகநூலில் வெளியிட்ட பதிவு! | Tamil Arasu Kachchi Sumanthiran P Sathiyalingam

உலகு எல்லாம் பரந்து வாழும் ஈழத்து தமிழ் உறவுகளுக்கு தெரிவித்து, எனது வருத்தத்தை உங்களுடன் பகிர்ந்து இந்த பதிவை தொடர்கின்றேன்.

சிங்கள பிரதேசங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட தகுதி உள்ள பெண்களை அதுவும் அதில் 3 தமிழ் பெண்களை சிங்கள மக்களால் நாடாளுமன்றம் அனுப்ப முடியும் என்கின்ற போது,

சுரேக்காவையும், கிருஷ்ணவேணியையும் காடுகள் மலைகள் மேடுகள் பள்ளங்கள் எனப் பல இடங்களிலும் தேடி, வீட்டுக்குள் கொண்டு வந்து வேட்பாளராக நிறுத்திய புத்திஜீவி எம்.ஏ. சுமந்திரனால், வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரு தகுதி உள்ள பெண்ணை தேடிக் கண்டு பிடித்து தேசியப்பட்டியலால் நாடாளுமன்றம் அனுப்ப முடியவில்லை என்பது பெரும் அதிர்ச்சியாகவே இருக்கின்றது.

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் தெரிவு குறித்து நபரொருவர் முகநூலில் வெளியிட்ட பதிவு! | Tamil Arasu Kachchi Sumanthiran P Sathiyalingam

இந்த தேசியப் பட்டியல் விவகாரம் என்பது தமிழரசு கட்சியின் உள்வீட்டு விவகாரத்தில் ஒன்று என்பதனாலும், தமிழ் தேசிய கட்சிகளில் ஒன்றான தமிழரசு கட்சியை விமர்சிக்காமல் கடப்பதே தற்போதைய காலத்தின் தேவை என்பதனாலும், இவ் விடயம் சம்பந்தமாக விமர்சனங்களை தொடரமால் நான் கடந்து செல்லுவதோடு, இனிமேல் எதையும் மாற்ற முடியாது என்பதனால், தமிழரசு கட்சி மீது இது சம்பந்தமாக விமர்சனங்கள் மேலும் வைக்காமல் தாண்டி செல்ல, அனைத்து உறவுகளையும் வேண்டிக் கொண்டுகொள்கிறேன்.

பிரதமர் ஹரிணியின் ஒருங்கிணைப்பு உதவியாளராக மொஹமட் றியாட் ஷம்மி! யார் இவர்?

பிரதமர் ஹரிணியின் ஒருங்கிணைப்பு உதவியாளராக மொஹமட் றியாட் ஷம்மி! யார் இவர்?

மழை நின்ற பின்பும் தொடரும் தூறல் போல, எம்.ஏ.சுமந்திரன் மக்களால் நிராகரிக்கப்பட்டும், அவரது, இவ்வாறான குழப்பகரமான அரசியல் தமிழரசு கட்சிக்குள் தற்போது தொடர்ந்தாலும் கூட அது இனிமேலும் அதிக காலம் நீடிக்காது என்பதை நம்பிக்கையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் தெரிவு குறித்து நபரொருவர் முகநூலில் வெளியிட்ட பதிவு! | Tamil Arasu Kachchi Sumanthiran P Sathiyalingam

அத்தோடு ஊழலுக்கு எதிரான மாற்றம் ஒன்றுக்கான நாட்டு மக்களது பேரெழுச்சியினால் திடீரென அதிரடியாக வெற்றி பெற்ற ஜேவிபி கட்சி, நேர்த்தியான நடவடிக்கைகளை திட்டமிட்டு பெளத்த சிந்தனைப் படி செயல்படுத்தும் போது, இவ்வாறன நிலைமை இனிமேல் தமிழரசு கட்சிக்குள் மட்டும் அல்ல தமிழ் தேசிய கட்சிகளுக்குள்ளும் வராதவாறு, திட்டமிட்டு கணித்து செயற்படுத்துவதன் மூலம், எதிர்கால நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என்பதை சுட்டிக் காட்டுகின்றேன்.

மாதிவெலவில் உள்ள குடியிருப்பை விட்டு வெளியேறிய தோல்வியடைந்த 30 எம்.பிக்கள்!

மாதிவெலவில் உள்ள குடியிருப்பை விட்டு வெளியேறிய தோல்வியடைந்த 30 எம்.பிக்கள்!

மேலும், தமிழ் தேசிய உயரிய இலட்சியத்துடன் உங்களுக்கு வாக்களித்து, உங்களை தெரிவு செய்த தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் நன்றிக் கடனாக, வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களிலும், மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட, தமிழரசு கட்சியின் 8  கெளரவப் பிரதிநிதிகளும், மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினதும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினதும், கெளரவப் பிரதிநிதிகளுமான, பத்துப் பிரதிநிதிகளாகிய நீங்கள், வெவ்வேறு கட்சிகளாக செயற்ப்பட்டாலும் கூட,

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு

சபாநாயகர் முன்னிலையில் செய்யப்பட இருக்கும் சத்தியப்பிரமாணத்தின் பின்னர், தமிழ் தேசிய நிலைப்பாட்டோடு உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்காக, தமிழ் தேசிய கொள்கை ரீதியில் நாடாளுமன்ற குழு அமைத்து கலந்துரையாடல்களை நேரடியாக சந்திக்க முடியாவிட்டாலும் zoom மூலம் ஏற்படுத்தி, ஒருமித்த கருத்துக்களோடு நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களுக்கு சென்று, நாடாளுமன்றத்தில் நீங்கள் அனைவரும் ஒருமித்த குரலாக ஒலிக்கும் போது மட்டுமே, சிதைவடைந்து இருக்கும் தமிழ் தேசியத்தை, வடக்கு கிழக்கில் மீட்டு தூக்கி எழுப்ப உங்களால் முடியும் என்பதை, தமிழ் தேசிய கெளரவப் பிரதிநிதிகளாகிய உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனது இந்த கருத்தினை உங்களுக்கு வாக்களித்து வெற்று பெற வைத்த தமிழ் மக்களின் நன்மை கருதி கரிசனையுடன் கவனத்தில் எடுத்து அதனை நடைமுறைப் படுத்துவீர்கள் என நம்புவதாக சுவாமி சங்கரானந்தா முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US