இலங்கையில் அரசு பணியாளர்களுக்கு கட்டாயமாகும் புதிய நடைமுறை!
நாட்டில் இருக்கும் அரச பணியாளர்கள் அனைவரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன (Upul Rohana) அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதை தடுக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என குறிப்பிடப்படுகின்றது.
அனைத்து அரச நிறுவனங்களும் பொது இடங்கள் என்பதால், அந்த இடங்களில் பணியாற்றும் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு கடமைக்காக நிறுவனம் ஒன்றிற்கு செல்லும் எவருக்கும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அலுவலர்கள் முழுமையாக கொரொனா தடுப்பூசி பெற்றுள்ளார்களா என்று விசாரிக்க உரிமை உண்டு என்றும் குறிப்பிடப்படுகின்றது.
விசாரணையின் போது அந்த அதிகாரி முழுமையாக கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால், அது தொடர்பாக பிரதேச பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்தோடு கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு ஒருவருக்கு உரிமை இருந்தாலும், இன்னொருவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உரிமை அவருக்கு இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.