ஒரு லீற்றர் கூட கிடைக்காது; டிரம்ப் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட ஈரான்
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும் இஸ்ரேல் - ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் டிரம்பின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த போர் எப்போது முடிய வேண்டும் என்பதை ஈரான் படைகளே தீர்மானிக்கும். பிராந்தியத்தின் எதிர்காலமும், போர்ச் சமன்பாடுகளும் தற்போது எமது ஆயுதப் படைகளின் கைகளிலேயே உள்ளன என ஈரான் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாது ஈரானின் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடருமானால், இந்தப் பிராந்தியத்திலிருந்து "ஒரு லீற்றர் எண்ணெய்" கூட ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படமாட்டாது என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.