தமிழர் பகுதியில் தூங்கி எழுந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இரு வீடுகள் உடைக்கப்பட்டு திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் நேற்று (18) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவத்தில் இரு வீடுகளை குறிவைத்து அவற்றின் யன்னல்களை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்த திருடர்கள், உறங்கியவர்களை மயக்க மருந்தை பயன்படுத்தி மயக்கத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
காலையில் எழுந்தவர்களுக்கு அதிர்ச்சி
இதன்போது வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் 170, 000 ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டாருக்கு காலை எழுந்த பின்னரே திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்ததுள்ளது.

யாழில் இருந்து விரட்டப்பட்ட மற்றுமொரு மருத்துவர் ; கிழிக்கப்படும் மருத்துவ மாபியாக்களின் முகத்திரை !
திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணையின் போது இரு சந்தேகநபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.