செவ்வாய்-சந்திரனால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றும் போதோ அல்லது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணையும் போதோ, சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஒரு அற்புதமான ராஜயோகத்தை இன்றைய தினம் (ஏப்ரல் 16 ஆம் திகதி) உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர். இப்போது செவ்வாய் சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். ஆயினும் வேலைப்பளு அதிகரிக்கும். எதையும் புரிந்து பொறுமையாக இருந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். இருப்பினும் செலவுகளும் அதிகரிக்கும். எனவே வரவு செலவு விஷயங்களில் சரியாக இருப்பது நல்லது. குடும்ப விஷயங்களில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காமல், நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். இருந்தாலும் உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
