திருமண இணையதளத்தில் ஏமாந்த பெண் மருத்துவர்! பெற்றோரே அவதானம்
தற்போது திருமண இணையதளம் ஊடாகவே பலரும் வரன்கள் தேடுவது அதிகரித்துள்ளது. விளம்பரங்க்கள் ஊடாக மக்களை கவர்ந்துவரும் திருமண இணையதளங்கள் சிலவற்றில் மோசடிகள் இடம்பேறுவதும் அவ்வப்போது செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் மும்பை திருமண இணையதளத்தில் போலி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு, தன்னை ஒரு பொறியியலாளர் என அறிமுகப்படுத்தி 30 வயது பெண் மருத்துவரை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்த 34 வயது நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருமண இணையதளத்தில் போலி அடையாளம்
இது குறித்து இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டம் நலசோபாராவைச் சேர்ந்த அந்த நபர், திருமண இணையதளத்தில் தனது கல்வி மற்றும் தொழில் விவரங்களைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னை ஒரு "பிளேபாய்" போலவும் பெண்ணிடம் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். தொடர்ந்து இருவரும் தொடர்பில் இருந்த நிலையில், பெண்ணை நேரில் சந்திக்க அழைத்துள்ளார்.
சிங்கப்பூரில் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனை; விசாரணையில் இருந்து தப்பிக்க ஆடும் நாடகமா?
சந்திப்பின்போது பாலியல் வன்கொடுமை செய்ததாக வைத்தியர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த வாலிவ் போலீசார், திங்கள்கிழமை அந்த நபரைைக் கைது செய்தனர்.
இருவருக்கும் இடையிலான தகவல் பரிமாற்றங்கள் மற்றும் திருமண இணையதள சுயவிவரம் உள்ளிட்ட ஆதாரங்களை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதால், கைது செய்யப்பட்ட நபர் சட்டப்படி குற்றமற்றவராகக் கருதப்படுகிறார்.
இந்தச் சம்பவம் திருமண இணையதளங்களில் பதிவிடப்படும் தனிப்பட்ட தகவல்களைச் சரிபார்ப்பதன் அவசியத்தை மீண்டும் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
கல்வி, வேலை, குடும்பப் பின்னணி உள்ளிட்ட விவரங்களை இணையதளச் சுயவிவரத்தில் இருப்பதை மட்டும் நம்பாமல், நேரில் சந்திப்பதற்கு முன்பு முடிந்தவரை சரிபார்ப்பது பாதுகாப்பானது என சமூக ஆர்வலகாள் அறிவுறுத்துகின்றனர்.