ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்ட சனத் நிஷாந்தவின் பூதவுடல்!
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரேவின் பூதவுடல் இன்று (28) ஆராச்சிக்கட்டுவ ராஜக தளுவ தேவாலய மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
சனத் நிஷாந்தவின் பூதவுடல் சிலாபம், ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்து.
பின்னர் இன்று பிற்பகல் 1 மணியளவில் இறுதிக் கிரியைக்கான மும்மத சமய அனுஷ்டானங்களுடன், அரச தலைவர்களில் உரைகள் என்பனவற்றின் பின்னர் பூதவுடல் வாகன பேரணியோடு ஊர்வரமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த இறுதி நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன மெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உட்பட அரச திணைக்கள பிரதானிகளும், முப்படையினரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று காலை ஆராச்சிக்கட்டுவ பகுதிக்கு வருகை தந்து, இராஜாங்க அமைச்சரின் பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.