கரு கலையாமல், குறை பிரசவம் ஏற்படாமல் இருக்க இதுவே சிறந்த பரிகாரம்!
திருமணம் உரிய வயதில் நடக்காதவர்களின் மன உளைச்சல், ஒருபுறம் இருக்க, திருமணமானவர்கள், உடனே கருத்தரிக்காத தம்பதியர் படும் பாடு அதைவிட அதிகம்.
கர்ப்ப காலத்தில் ரட்சாம்பிகை ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வதும், வழிபாடு செய்வதும் மிக சிறப்பாக பலனைப் பெற்றிட முடியும்.
குறைப்பிரசவம் ஏற்படாமல் இருக்கவும், கரு கலையாமல் ஆரோக்கியமாக வளர்ச்சியுடன் இருக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன என்பதைப் பார்ப்போம்.
குறைப்பிரசவம் ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம்;
ஒரு பெண் கருவுற்ற காலத்தில், தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேப்ப மரத்தை வெட்டவோ அல்லது வேப்ப மரத்துக் கிளையை ஒடிக்கவோ கூடாது.
கிணறு, தொட்டி போன்ற நீர் நிலைகள் அல்லது அதற்கு இணையானவற்றைக் கட்டாயம் மூடக்கூடாது. ஒரு பெண் கருவுற்றிருக்கிற காலங்களில் வீடு மாறக்கூடாது.
புது வீட்டிற்கான வாணம் தோண்டுதல் கூடாது. ஒரு பெண் கர்ப்பம் இருக்கிற காலத்தில், அவரது கணவன் வேறு இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளச் செல்வதும், மயானத்திற்குச் செல்வது முற்றிலும் கூடாது.
குழந்தை நல்ல வளர்ச்சியுடன் சிறப்பாக பிறக்க;
கர்ப்ப காலத்தில் ரட்சாம்பிகை ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வதும், வழிபாடு செய்வதும் மிக சிறப்பாக பலனைப் பெற்றிட முடியும்.
வியாழக்கிழமை தோறும், குரு ஹோரையில் தட்சிணாமூர்த்திக்கு, கொண்டைக்கடலை நிவேதனம் செய்வது நல்லது.
நவகிரகத்தில் இருக்கும் குரு பகவானுக்கு மஞ்சள் பொடி கலந்த நீரால் அபிஷேகம் செய்யலாம். மஞ்சள் வஸ்திரத்தை அணிவிக்கலாம்.
மஞ்சள், பொன்னிற ஆடைகளை குழந்தைகள், ஆசிரியர்கள், ஜோதிடர்களுக்கு தானமாக வழங்கலாம்.
குரு ஸ்தலமாக விளங்கும் திருச்செந்தூர் முருகனுக்கு 108 எலுமிச்சைகள் கோர்த்த மாலை அணிவித்து வழிபடலாம். யானை குருவின் காரகத்தில் பிரதானமாகப் பார்க்கப்படுகிறது.
அதனால் கோவில் யானைகளுக்கு தன் வயதை ஒத்த கரும்புகளை, எந்த ஒரு கிழமையாக இருந்தாலும் குருவின் ஹோரையில் உணவாக தரலாம்.