விடுதலையான ரஞ்சனுக்கு அதிரடியாக வழங்கப்பட்ட நியமனம்!
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலையான ரஞ்சன் ராமநாயக்க புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களின் மேம்பாட்டுக்கான நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார டுவிட்டர் பதிவில்,
I just offered @RamanayakeR a position as a goodwill ambassador to promote Sri Lankan migrant worker welfare globally upon his release and he gladly accepted. This is a voluntary position to make use of his tacit knowledges in the area of foreign employment pic.twitter.com/Zqz7BqcNMz
— Manusha Nanayakkara (@nanayakkara77) August 26, 2022
நான் புலம்பெயர்ந்த தொழிலாளர் நலனை உலகளாவிய ரீதியில் மேம்படுத்துவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் நல்லெண்ணத் தூதுவர் பதவியை விடுதலையான ரஞ்சன் ராமநாயக்கவிற்கு வழங்கினேன்.
அதனை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். இது வெளிநாட்டு வேலைவாய்ப்பில் அவரது அறிவைப் பயன்படுத்துவதற்கான ஒரு தன்னார்வ நிலையாக இருக்கும் என மனுக்ஷ பதிவிட்டுள்ளார்.