PSTA சட்டம் PTA-வை விட பல மடங்கு ஆபத்தானது ; தவராசா விடுத்துள்ள எச்சரிக்கை

Facebook Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act Court of Appeal of Sri Lanka
By Sahana Jun 13, 2026 05:12 PM GMT
Report

புதிய " அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டம்" (PSTA) பழைய சட்டத்தை விட பல மடங்கு ஆபத்தானது என ஜனாதிபதி சட்டத்தரணி கே. தவராசா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழர் பகுதியில் இ.போ.ச. சாரதியுடன் முரண்பாடு ; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்

தமிழர் பகுதியில் இ.போ.ச. சாரதியுடன் முரண்பாடு ; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்

"மக்களை முட்டாள்கள் ஆக்கக் கூடாது, சீட்டை மாற்றுவது போல் ஆள் மாறக் கூடாது" என அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த புதிய சட்ட வரைவில் ஒளிந்திருக்கும் பாரதூரமான ஆபத்துகள் குறித்து விபரித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததற்குப் பின்னர் இலங்கையில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கங்களும், சர்வதேசத்திற்கும் உள்நாட்டு மக்களுக்கும் வழங்கிய பிரதான வாக்குறுதி "பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) நீக்கப்படும்" என்பதாகும்.

ஆனால், நடைமுறையில் ஒரு அரசு அந்தச் சட்டத்தை நீக்குவதாகக் கூறிவிட்டு ATA (Anti-Terrorism Act) பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

PSTA சட்டம் PTA-வை விட பல மடங்கு ஆபத்தானது ; தவராசா விடுத்துள்ள எச்சரிக்கை | Psta Act Times Dangerous Than Pta Thavarasa Warns

மற்றொரு அரசு Counter-Terrorism Act-ஐ பயங்கரவாத தடுப்புச் சட்டம் கொண்டு வர முயன்றது. தற்போதைய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சரும், "இப்படியான கடுமையான சட்டங்களை வைத்துக் கொண்டு தங்களுக்கு ஆட்சி செய்ய வேண்டிய அவசியமில்லை, எனவே பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம்" என அண்மையில் அறிவித்திருந்தார்.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும், இதன் பின்னணியில் அதைவிடப் பாரதூரமான சதி ஒன்று அரங்கேறி வருவதாக சட்டத்தரணி கே. தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) வெறும் 25 முதல் 28 பக்கங்களை மட்டுமே கொண்டிருந்த நிலையில், இந்த புதிய PSTA வரைவு 105 பக்கங்களைக் கொண்டு, படுகடுமையான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

பழைய சட்டத்தின் பிரதான பிரிவான 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க சட்டத்தை அடிப்படையாக வைத்தே இந்த புதிய வரைவும் எழுதப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின்படி, ஒருவரது தடுப்புக்காவல் காலம் 18 மாதங்களில் இருந்து ஒரு வருடமாகக் குறைக்கப்பட்டிருந்தது.

ஆனால் புதிய PSTA சட்டத்தின் 28 ஆவது பிரிவின் கீழ், சந்தேகநபர் ஒருவரை ஒரு வருடம் தடுப்புக்காவலிலும், மேலும் ஒரு வருடம் சிறையிலும் என மொத்தம் இரண்டு வருடங்கள் தடுத்து வைத்திருக்க முடியும்.

PSTA சட்டம் PTA-வை விட பல மடங்கு ஆபத்தானது ; தவராசா விடுத்துள்ள எச்சரிக்கை | Psta Act Times Dangerous Than Pta Thavarasa Warns

இந்த சட்ட வரைவின் 39 ஆவது பிரிவின்படி, ஒருவருக்கு எதிராக சாட்சியம் இருப்பதாக காவல்துறையினர் சட்டமா அதிபருக்கு அறிக்கை அனுப்பி, மேல் நீதிமன்றத்தின் மூலம் உத்தரவைப் பெற்றால், விசாரணை முடியும் வரை (கைது செய்த நாளில் இருந்து இறுதி வரை) காலவரையறையின்றி சந்தேகநபரை தடுத்து வைக்க முடியும்.

பழைய சட்டத்தின் கீழ், பயங்கரவாதச் செயல் குறித்து தகவல் வழங்கத் தவறினால் அதிகபட்சமாக 7 வருட சிறைத்தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டது.

ஆனால், புதிய PSTA சட்ட வரைவின்படி, தகவல் வழங்கத் தவறினால் 7 வருட சிறைத்தண்டனையுடன் சேர்த்து 70 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம். ஒருவேளை தெரியாமல் தவறான தகவல் வழங்கப்பட்டால் 2 வருட சிறையும் 20 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் இன்னும் 2000 பேர் சிறையிலேயே அடைப்பட்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்தையும் விட விசித்திரமான அம்சம் என்னவென்றால், வன்முறையற்ற சாத்வீக பொதுப் போராட்டங்கள் மற்றும் சிவில் சமூக செயல்பாடுகளைக் கூட பயங்கரவாதத்தின் கீழ் முடக்கும் ஆபத்தான பிரிவுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தவராசா கவலை வெளியிட்டுள்ளார்.

இதன்படி போராட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் பேஸ்புக்கில் பதிவிடல் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டுதல் என்பனவும் இந்த சட்டத்தின்கீழ் குற்றங்களாக கருதப்படும் என்று அவர் குறி்ப்பிட்டுள்ளார். இந்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனையை வழங்குவதற்கும் சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை (PTA) நீக்குவதாக வழங்கும் வாக்குறுதி உண்மையானதாக இருக்க வேண்டுமாயின், அதற்குப் பதிலாக அதைவிடவும் படுகடுமையான இந்த PSTA சட்ட வரைவை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொண்டு வரமாட்டோம் என்ற உறுதியான வாக்குறுதியையும் அரசாங்கத்திடமிருந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற வேண்டும் என்பதே தற்போதைய பிரதான கோரிக்கையாகும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி தவராசா தெரிவித்துள்ளார்.

கண்டி - குருணாகல் வீதியில் கோர விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

கண்டி - குருணாகல் வீதியில் கோர விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வல்வெட்டி

14 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US