ஆளுநர் இழுத்தடிப்பு; விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள்
சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக பெரும் வெற்ரியை சந்தித்தபோதும் அவரது பதவியேற்பில் இழுபறி நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் தொல் திருமாளவன், பிரகாசஸ்ராஜ், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல்கொடுத்து வருவதுடன், ஆளுநர் , மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து விஜய் பதவியேற்க ஆவன செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.

தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை மக்கள் தவெகவுக்கு வழங்கியுள்ளனர். எனவே, அதன் தலைவர் விஜயைப் பதவியேற்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்த திருமாவளவன், ஆளுநர் இன்னும் முடிவெடுக்காமல் காலதாமதம் செய்வது அரசியல் குழப்பங்களுக்கே வழிவகுக்கும் என எச்சரித்தார்.
பதவியேற்பதில் சிக்கல் நிலை
இன்றையதினம் விஜய் பதவியேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், ஆளுநர் அழைக்காததால் பதவியேற்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து பேசினார்.
ஆளுநரின் அழைப்பின் பேரிலேயே விஜய் ஆளுநர் மாளிகை சென்றதாக சொல்லப்படும் நிலையில் பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற சூழலில் ஆளுநர் சில விளக்கங்களை கேட்டதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், விஜய்க்கு இருக்கும் ஆதரவு, பெரும்பான்மையை எப்படி நிரூபிக்க போகிறீர்கள் என பல கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகின்றது. இதனையடுத்தே பல அரசியல்வாதிகள் , விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.