ஜனாதிபதிக்கு மஹிந்த விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
பிரதமர் பதவி குறித்து தாம் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு (Gotabaya Rajapaksa) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaska) அறிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது நிலைப்பாட்டை இன்று (01-05-2022) காலை ஜனாதிபதி கோட்டாபயவிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இராஜினாமா செய்யுமாறு கோரிய மகாநாயக்க தேரர்களின் பிரேரணையை உடனடியாக அமுல்படுத்துமாறு பௌத்த பிக்குகள் குழு நேற்று ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே பிரதமர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அனைத்துக் கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.