தேனிலவுக்கு இலங்கைக்கு வந்த புதுமண ஜோடியின் விபரீத முடிவு ; துயரத்தில் உறவினர்கள்

Sri Lanka Wedding Bengaluru Married Death
By Sulokshi Dec 29, 2025 11:47 AM GMT
Report

  இலங்கையில் தேனி​ல​வை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குத் திரும்பிய ஜோடி, தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத் தகராறு மற்றும் வரதட்சணை கொடுமையால் பெங்களூருவில் இளம்பெண் தன்னுயிரை மாய்த்துக்கொண்டதைத் தொடர்ந்து, அவரது கணவரும் நாக்பூரில் தன்னுயி​ரை மாய்த்துக்கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தேனிலவுக்கு இலங்கைக்கு வந்த புதுமண ஜோடியின் விபரீத முடிவு ; துயரத்தில் உறவினர்கள் | Newlywed Couple Suicide Bangalore Honeymoon Lanka

தேனிலவுக்காக இலங்கை...

பெங்களூருவைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் சமீபத்தில் மிக விமர்சையாகத் திருமணம் நடைபெற்றது.

திருகோணமலை சம்பூரில் கரையொதுங்கிய மர்ம பொருள்! மக்கள் செல்ல தடை

திருகோணமலை சம்பூரில் கரையொதுங்கிய மர்ம பொருள்! மக்கள் செல்ல தடை

திருமணத்திற்குப் பிறகு இருவரும் தேனிலவுக்காக இலங்கை வந்து தங்கியிருந்தபோது, பெண்ணின் பழைய காதல் விவகாரம் கணவருக்குத் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் தம்பதியிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே டிசம்பர் 21-ம் திகதி அவர்கள் பெங்களூரு திரும்பினர்.

வீடு திரும்பிய பிறகும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெண்ணை இடைவிடாது அவமானப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. குடும்ப கௌரவம் கருதி பெண் விவாகரத்து செய்ய விரும்பாமல் கொடுமைகளைப் பொறுத்துக் கொண்டுள்ளார்.

ஆனால், மன உளைச்சல் தாங்க முடியாமல் கடந்த வியாழக்கிழமை அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். . தகவலறிந்து பெண்ணின் உறவினர்கள் கணவர் வீட்டின் முன் திரண்டு போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து ஷாக் கொடுக்கும் தங்கம் விலை; இன்று எவ்வளவு தெரியுமா!

தொடர்ந்து ஷாக் கொடுக்கும் தங்கம் விலை; இன்று எவ்வளவு தெரியுமா!

பெண்ணின் மரணத்திற்கு காரணமான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தினர்.

பெண்ணின் மரணம் தொடர்பாகப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, அந்த இளைஞர் தனது தாய் மற்றும் சகோதரருடன் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்குத் தப்பிச் சென்றார்.

தேனிலவுக்கு இலங்கைக்கு வந்த புதுமண ஜோடியின் விபரீத முடிவு ; துயரத்தில் உறவினர்கள் | Newlywed Couple Suicide Bangalore Honeymoon Lanka

மகனுடன் தாயாரும் தற்கொலை முயற்சி

அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது, வெள்ளிக்கிழமை அன்று அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

மகனுடன் தாயாரும் தற்கொலைக்கு முயன்று உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்ட அவர், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட மசாஜ் நிலையங்கள்; பல வெளிநாட்டு பெண்கள் அதிரடியாக கைது

கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட மசாஜ் நிலையங்கள்; பல வெளிநாட்டு பெண்கள் அதிரடியாக கைது

மரணமடைந்த பெண்ணின் தாய் இது குறித்துக் கூறுகையில், "அவர்கள் செய்த தவற்றை உணர்ந்துவிட்டார்கள். என் மகள் அவர் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தாள். அவள் இல்லாமல் அவரால் வாழ முடியாது என்பதை உணர்ந்து அவரும் இந்த முடிவை எடுத்துள்ளார்" என கண்ணீருடன் தெரிவித்தார்.

அடுத்தடுத்து நடந்த இந்த மரணங்கள் குறித்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிர மாநிலப் பொலிஸார் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு சிறிய தகராறு மற்றும் குடும்பப் பிரச்சனை இவ்வளவு பெரிய உயிர் இழப்புகளுக்கு இட்டுச் சென்றிருப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US