இக்கட்டான நேரத்தில் உக்ரைன் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் மால்டோவா!
உகரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் உக்ரைனில் இருந்து எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களுக்கு தஞ்சம்தர தாயர் என மால்டோவா நாட்டின் அதிபர் மைய சண்டு (Maia Sandu ) தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷிய கூட்டமைப்பு ஏவுகணைகளை பொழிந்து வருவதனால், லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் ஜைட்டோமைர் பகுதிகளில் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த தாக்குதல்கள் எல்லை பிரிவுகள், எல்லையில் ரோந்து பகுதிகள் மற்றும் சோதனை சாவடி பகுதிகளில் நடத்தப்படுகின்றன.

இதற்காக ரஷியா, சிறிய வகை பீரங்கிகள், கனரக மற்றும் சிறிய ஆயுதங்களை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு உள்ளதுடன், ரஷியாவின் கிரீமியா சுயாட்சி பகுதியில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
போரை முன்னிட்டு லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிக்கு புலம்பெயர உக்ரைன் அறிவுறுத்தி உள்ளது. தனியாக செல்ல இயலாதவர்கள் ரெயில்களை பயன்படுத்த கூறப்பட்டு உள்ளது. அவர்களை லிசிசான்ஸ்க், ரூபிஜ்னே மற்றும் ஸ்வாடோவ் ரெயில் நிலையங்களுக்கு செல்லும்படி கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து மெட்ரோ சுரங்க பாதையில் உக்ரைன் மக்கள் தங்கள் உயிரை தற்காத்து கொள்வதற்காக தஞ்சமடைந்து உள்ளனர். உக்ரைனில் தலைநகர் கீவ் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ சுரங்கப்பாதைகளில் மக்கள் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

கிளஸ்டர் பாம்ப் எனப்படும் கொத்து குண்டு உள்ளிட்ட வகை வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன. உக்ரைனில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து ரஷியா குண்டு வீசுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், உக்ரைன் மக்கள் பீதியடைந்து உள்ளனர். பலர் தங்களை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு இடங்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். இந்நிலையில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டோவா நாட்டின் அதிபர் மைய சண்டு (Maia Sandu) உக்ரைன் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
ரஷியா தாக்குதலை தொடர்ந்து உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்களுக்கு தஞ்சம் தர தயார் என்று மால்டோவாவின் அதிபர் மைய சண்டு (Maia Sandu) அறிவித்துள்ளார்.
மேலும், உக்ரைனில் இருந்து எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களை ஏற்க தயார் எனவும் அவர் கூறியுள்ளமை, உக்ரைன் எல்லையோர மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது.
தொடர்புடைய செய்தி
விளாடிமிர் புதின் அதிரடி உத்தரவு; உக்ரைன் மீது குண்டுமழை பொழியும் ரஷ்யா; பதற்றத்தில் உலகநாடுகள்