சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞன்
இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திலுள்ள தேவாலயத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற 21 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
27 வயதான குறித்த பெண் தனது குழந்தையுடன் தேவாலயத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போதே இளைஞன் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இவர் கடந்த மே மாதம் 10ஆம் திகதி இரவு அதே பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்று விட்டு தனது குழந்தையுடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினரான ஜனா (வயது 21) என்பவர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை கண்டவுடன் ஜனா அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து அந்த பெண் அளித்த முறைப்பாட்டில் திருத்தணி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஜனாவை நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஜனா திருவள்ளூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.