வெளிநாட்டு பெண்ணுக்கு தனது அந்தரங்கத்தை காட்டியவருக்கு நேர்ந்த கதி
திருக்கோவில் பிரதேசத்தில் சுற்றுலா வந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் முன், தனது அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொந்தரவு செய்த பொகவந்தலாவை குடும்பஸ்தரை 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நியூசிலாந்து பெண் சுற்றுலா பயணி பொத்துவில் அறுகம்பே பிரதேசத்துக்கு அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதி ஊடாக வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தார்.

வெளிநாட்டு பெண்ணை இடைமறித்து பாலியல் தொந்தரவு
இந்நிலையில் திக்கோவில் பிரதேசத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற ஆண் ஒருவர், முச்சக்கர வண்டியை இடைமறித்து அவருக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக குறித்த பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பெண் அறுகம்பே சுற்றுலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததார். இதையடுத்து குறித்த நபரின் புகைப்படத்தை ஊடகங்கள் ஊடாக பொலிஸார் வெளியிட்டு அவர் தொடர்பாக தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சந்தேக நபர், ஒரு பிள்ளையின் தந்தையான பொகவந்தலாவையைச் சேர்ந்தவர் 25 வயதுடைய எனவும் களுவாஞ்சிக்குடி எருவில் பிரதேசத்தில் திருமணம் முடித்து கடந்த சில வருடமாக திருக்கோவில் பிரதேசத்தில் வாடகை வீடு ஒன்றில் குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதையடுத்து அவர் வாடகைக்கு இருந்த வீட்டை முற்றுகையிட்ட போது அவர் அங்கு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் வெளியேறி களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து மருதமுனை பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அருகில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர், பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் இன்று (17) ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.