இரவில் சோதனையில் ஈடுபட்ட பொலிஸாருக்கு ஹெப் வாகனத்தில் காத்திருந்த அதிர்ச்சி!
கற்பிட்டி பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த கெப் வண்டியை பொலிஸார் மற்றும் கடற்படையினர் நேற்று (28) இரவு கரம்பை சோதனைச் சாவடியில் வைத்து சோதனைக்கு உற்படுத்தப்பட்டபோது சுமார் 650 கையடக்கத் தொலைப்பேசிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைபற்றப்பட்ட கையடக்கத் தொலைப்பேசிகள் இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக அனுமதிப்பத்திரமின்றி கொண்டுவரப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேக நபர் அநுராதபுரம் கெக்கிராவைப் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைப்பேசிகள் , கெப் வண்டி நுரைச்சோலைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் நுரைச்சோலைப் பொலிஸார் பொருட்களையும் சந்தேகநபரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.