யாழில் சற்றுமுன்னர் பயங்கர சம்பவம்: மூவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!
யாழ் இணுவில் பகுதியில் ஹயஸ் வாகனத்தை ரயிலுடன் மோதித்தள்ளியதில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (14-02-2024) மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற ரயிலுடன் ஹயஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் வாகனத்தில் சென்ற மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.