நீரிழிவு நோய்க்கு கரிசலாங்கண்ணி நல்ல மருந்தா? உண்மை என்ன?
வேலிகளில், விவசாய நிலங்களில் கரிசலாங்கண்ணி தானாகவே முளைத்து காணப்படும் தாவரமாகும். இதில் இரண்டு வகையுள்ளன. ஒன்று வெள்ளைப் பூக்களுடன் காணப்படும் வெள்ளை கரிசலாங்கண்ணி. மற்றது மஞ்சள் நிறப்பூக்கள் கொண்ட மஞ்சள் கரிசலாங்கண்ணி ஆகும்.
“நீரிழிவு நோய்க்கு கரிசலாங்கண்ணி நல்ல மருந்தாகும்” என்ற கூற்று பொதுவாக மக்கள் மருத்துவத்தில் (folk medicine) சொல்லப்படுவது தான். ஆனால் இதை மருத்துவ ரீதியாக சில முக்கிய விளக்கங்களுடன் பார்க்க வேண்டும்.
கரிசலாங்கண்ணி (Eclipta alba) என்பது பாரம்பரிய ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை. இது கல்லீரல் ஆரோக்கியம், செரிமானம் மற்றும் சில அழற்சி தொடர்பான பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் தொடர்பாக சில ஆய்வுகளில் இந்த மூலிகை இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவக்கூடும் என ஆரம்ப கட்ட சான்றுகள் உள்ளன.

நீரிழிவு நோய்க்கு கரிசலாங்கண்ணி நல்ல மருந்தாகும். அஜீரணம், வயிற்று வலி, குடலில் புண், சோகை, உடலிலுள்ள கொழுப்பைக் கரைக்கும். பித்தப்பையில் கற்கள் இருந்தால் அவற்றைக் குணப்படுத்தும். ஈரல் வீக்கமடைந்திருந்தால் குணமாக்கும். மஞ்சள் காமாலை குணமாகும்.
கீழ்நெல்லி, கரிசலாங்கண்ணி சமஅளவு எடுத்து அரைத்து பசுமோர் அல்லது பசும் பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் 5 நாட்களுக்குக் குறையாமல் குடித்து வந்தால் குணமாகும்.
அரை தேக்கரண்டி கரிசலாங்கண்ணிச் சாற்றில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குழந்தைக்குக் கொடுத்தால் சளி இருமல் குணமாகும். குழந்தைகளின் உபாதைகளுக்குக் கொடுக்கலாம்.
இரும்புச்சத்து இருப்பதால் சோகை நோயுண்டாகாது. கரிசலாங்கண்ணிச் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி தலையில் அன்றாடம் பூசி வருகின்றனர். அதனால் முடி உதிர்வு குறைந்து விரைவில் நரைக்காது. முடி செழித்து வளரும்.