குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை தொடர்பில் வெளியான பல அதிர்ச்சி தகவல்

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Sahana Feb 05, 2025 12:14 AM GMT
Sahana

Sahana

Report

மாத்தறை, கம்புருபிட்டியவில் குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொழில் திணைக்களம் EPF தொடர்பில் விசேட அறிவிப்பு

தொழில் திணைக்களம் EPF தொடர்பில் விசேட அறிவிப்பு

குறித்த ஆசிரியையின் கொலை அவரது 33வது பிறந்தநாளில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸாரின் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயும் சகோதரனும் இந்த கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்புருபிட்டிய மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், ஆசிரியை தலையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை தொடர்பில் வெளியான பல அதிர்ச்சி தகவல் | Informat Released About Teacher Murdered By Family

சம்பவம் நடந்த இடத்தில் இரத்தக் கறை படிந்த இரும்புச் சுத்தியல் மற்றும் கத்தி கண்டெடுக்கப்பட்டன. மேலும் சுற்றியுள்ள பகுதியில் சோதனை செய்தபோது ஒரு ஓடையின் அருகே இரத்தத்தைத் துடைக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தலையணை உறையும் கண்டெடுக்கப்பட்டது.

கத்தி மற்றும் இரும்பு பூச்சாடியால் தாக்கப்பட்டு ஆசிரியை கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மரணம் நிகழ்ந்த இடத்தில் மயக்கமடைந்திருந்த தாய் உடனடியாக கம்புருபிட்டிய ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் தனது நீரிழிவு நோய்க்கான மருந்தை அதிகமாக உட்கொண்டதால் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதாக தெரியவந்தது.

சம்பவம் நடந்த இடத்தில் இரண்டு இரத்தக்கறை படிந்த கடிதங்களும் கண்டெடுக்கப்பட்டன, மேலும் அவை தாயாரால் எழுதப்பட்டவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு கடிதம் பொலிஸாருக்கும் மற்றொன்று மகனுக்கும் எழுதப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.   

குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை தொடர்பில் வெளியான பல அதிர்ச்சி தகவல் | Informat Released About Teacher Murdered By Family

அந்த கடிதத்தில், மகள் பல ஆண்டுகளாக சொத்து கேட்டு தன்னை துன்புறுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தனது மகள் தன்னை கழுத்தை நெரித்துக் கொள்ள முயன்றபோது இவ்வாறு கொலை செய்யப்பட்டதாகவும் தாய் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் தாய் எழுதிய கடிதங்கள் தனது மகனைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த ஆசிரியையின் தந்தை சிறிது காலத்திற்கு முன்பு மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார், மேலும் அவர் தனது தாய் மற்றும் மூத்த சகோதரருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

குறித்த குடும்பத்திற்குள் சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிவப்பு பட்டியலில் 68 இலங்கையர்கள்; veLiwaaddilமூவர் கைது!

சிவப்பு பட்டியலில் 68 இலங்கையர்கள்; veLiwaaddilமூவர் கைது!

மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US