ஜனாதிபதி தேர்தலில் ரணில் வெற்றி பெற்றால் பிரதமர் இவரா!
வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி இலங்கையில் இடம்பெறவுள்ள 9 ஆவது ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் வெற்றி பெற்றால், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவே தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன இதனை ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அதேவேளை “1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன வெற்றிபெற்ற போது மறைந்த ரணசிங்க பிரேமதாச பிரதமராக இருந்தார்,
மேலும் பிரேமதாச பிரதமராகத் தொடர்ந்தார். “1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெற்றிபெற்ற போது மறைந்த ரத்னசிறி விக்கிரமநாயக்க பிரதமராக இருந்தார்.
“1999 இல் திருமதி குமாரதுங்க தனது இரண்டாவது அமைச்சரவையை அமைத்த பின்னரும் விக்கிரமநாயக்க பிரதமராகத் தொடர்ந்தார்.
"எனவே, ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி வெற்றி பெற்றால் பிரதமர் பதவியை வகிக்கும் நபர் அதே பதவியில் தொடர்வது வழமையாகும்" எனவும் வஜிர அபேவர்தன கூறினார்.