‘இதயம்’ பதிவாகவில்லை; தேர்தல்கள் ஆணைக்குழு
இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்ரெம்பரில் இடம்பெறாவுள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதிவு செய்யப்பட்ட அடையாளங்களில் ‘இதயம்’ என்ற அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சுயேட்சை வேட்பாளர் சின்னங்களை முன்பதிவு செய்ய முடியாது
அதேசமயம் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களை முன்பதிவு செய்ய முடியாது என தெரிவித்த அவ்ர், வேட்புமனு தாக்கல் செய்த பின், அனைத்து சுயேட்சை வேட்பாளர்களும் அழைக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
வேட்பாளர்கள் அழைக்கபப்ட்டு , பதிவு செய்யப்பட்ட சின்னங்களின் அளவு வழங்கப்பட்டு, வேட்பாளர்கள் தாங்கள் விரும்பிய சின்னங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க கூறினார்.