ஆபாச படங்களை காண்பித்து சிறுமி 5 மாதமாக பலரால் வன்புனர்வு;கிழக்கில் பயங்கரம்
அம்பாறை நிந்தவூர் பகுதியில் கடந்த 5 மாதமாக நடைபெற்று வந்த ஆபாச நடவடிக்கைகளில், 12 வயது சிறுமி பல்வேறு சந்தேக நபர்களால் வற்புறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனைய 3 தலைமறைவான சந்தேக நபர்களில், இன்று (24) வொலிவேரியன் கிராமத்தில் 36 வயது ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 21-ஆம் தேதி இரவு இந்த நடவடிக்கை இடம்பெற்றது.கைது செய்யப்பட்ட நபர் குடும்பஸ்தர் என்பதும், கல்முனை மற்றும் அக்கரைப்பற்று பகுதிகளைச் சேர்ந்தவர் என ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக சிறுமியை பாதுகாக்க விட்டு, அவர் வெளி மாவட்ட சிறுவர் காப்பகத்தில் தங்கியுள்ளார். பொலிஸார், சம்பந்தப்பட்ட மற்ற சந்தேக நபர்களையும் கைது செய்ய மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.