மஹிந்தவை தொடர்ந்து நாமலும் வெளிப்பட்டார்!
மஹிந்த ராஜபக்ஷ வருகையைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
நாட்டில் கடந்த 9ஆம் திகதி ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் இருந்து திருகோணமலை கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, கடற்படை தளத்தில் மஹிந்த குடும்பத்தினர் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது.
அதேசமயம் மஹிந்த குடும்பத்தினர் நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அவர்கள் இருவரும் இன்று நாடாளுமன்றில் பிரசன்னமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
மறைவில் இருந்து வெளிப்பட்டார் மஹிந்த!
