இலங்கையின் அடுத்த சபாநாயகர் யார் தெரியுமா?

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Sri Lanka Politician
By Shankar Dec 13, 2024 08:20 PM GMT
Shankar

Shankar

Report

திவிநெகும சட்டமூலம் தொடர்பில் எழுந்த சர்ச்சையால், மஹிந்த ஆட்சியின்போது பிரதம நீதியரசராக இருந்த ஷிராணி பண்டார நாயக்க குற்றப் பிரேரணைமூலம் பதவி நீக்கப்பட்டார்.

இவ் விடயத்தில் அப்போதைய சபாநாயகராக செயற்பட்ட சமல் ராஜபக்ச முன்னின்று செயற்பட்டார். ஆளுங்கட்சிக்கு சார்பாகவே அவரது நகர்வுகள் அமைந்திருந்தன.

யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அர்ச்சுனா எம்பியால் குழப்பம்; அரச அதிகாரிகள் ஆத்திரம்!

யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அர்ச்சுனா எம்பியால் குழப்பம்; அரச அதிகாரிகள் ஆத்திரம்!

இலங்கையின் அடுத்த சபாநாயகர் யார் தெரியுமா? | Do You Know Will Be The Next Speaker Of Sri Lanka

கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின்போது சபாநாயகராக பதவி வகித்த மஹிந்த யாப்பா அபேவர்தன, தனது அலுவலகத்தை குடும்ப உறுப்பினர்கள் மூலம் நிரப்பினார்.

ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவே சபையில் செயற்பட்டார். நிறைவேற்று அதிகாரத்துக்கு எப்போதும் கட்டுப்பட்டவராகவே இருந்தார்.

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!

ரணில் ஜனாதிபதியான பின்னர்கூட அரசமைப்பு பேரவையை நிறைவேற்று துறையின் ஒரு கிளையாக மாற்றும் வகையில் அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தன. நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்கூட அவர் எதிர்கொண்டிருந்தார்.

இலங்கையின் அடுத்த சபாநாயகர் யார் தெரியுமா? | Do You Know Will Be The Next Speaker Of Sri Lanka

ஆனால் சபாநாயகர் பதவிக்கு அசோக ரன்வல நியமிக்கப்பட்டு, ஒரு மாதம்கூட செல்லவில்லை. அவரின் கல்வித் தகைமை தொடர்பில் எழுந்த சர்ச்சையால் அவர் தாமாகவே முன்வந்து பதவி விலகியுள்ளார்.

சபாநாயகர் பதவிக்கு கலாநிதி பட்டம் அவசியமில்லை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இருந்தாலே போதும். மேலும், அவர் கல்வித்தகைமை அற்றவர் என்பது இன்னமும் உறுதியாகவில்லை. இருப்பினும், உரிய சான்றிதல்களை முன்வைக்க முடியாத காரணத்தால் அவர் பதவி துறந்துள்ளார்.

விரைவாக கடவுச்சிட்டை பெற்றுக்கொடுக்க 6000 ரூபா வாங்கிய clark

விரைவாக கடவுச்சிட்டை பெற்றுக்கொடுக்க 6000 ரூபா வாங்கிய clark

"கல்வித் தகுதியை உறுதிப்படுத்த தேவையான சில ஆவணங்கள் என்னிடம் இல்லாததாலும், அவற்றை உரிய நிறுவனங்களிடம் பெற வேண்டியதாலும், தற்போது அந்த ஆவணங்களை விரைவாகச் சமர்ப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் அடுத்த சபாநாயகர் யார் தெரியுமா? | Do You Know Will Be The Next Speaker Of Sri Lanka

எனக்கு முனைவர் பட்டம் வழங்கிய ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனத்தினால் குறித்த கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும், விரைவில் அவற்றை சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளேன்." - எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

தான் தவறான தகவல்களை வழங்கியுள்ளார் என்பது உறுதியாகாதபோதிலும் சபாநாயகர் பதவியின் முக்கியத்துவம் கருதி அசோக ரன்வல இராஜினாமா செய்துள்ளமை சிறந்த முன்னுதாரணமாகும்.

சபாநாயகர் பதவியை தூக்கி எறிந்த அசோக ரன்வல!

சபாநாயகர் பதவியை தூக்கி எறிந்த அசோக ரன்வல!

அவருக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம், ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை.

இலங்கையின் அடுத்த சபாநாயகர் யார் தெரியுமா? | Do You Know Will Be The Next Speaker Of Sri Lanka

சிலவேளை அவர் போலியான தகவல்களை வழங்கி இருந்தால் எம்.பி. பதவியையும் இராஜினாமா செய்வதே பொருத்தமான நடவடிக்கையாக அமையும்.

மேற்குலக நாடுகளில் விபத்து ஏற்பட்டால்கூட போக்குவரத்து அமைச்சர்கள் பதவி விலகும் சூழ்நிலையில், இலங்கையில் பதவிகளில் இருந்து விரட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் வரவேண்டும். அவ்வாறு இல்லாமல் பதவி விலகி புதிய அரசியல் கலாசாரத்துக்கு சபாநாயகர் வழிவகுத்துள்ளார்.

அடுத்த சபாநாயகர்

தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெற்ற பின்னர் நிஹால் கலப்பதியை அப்பதவிக்கு கொண்டுவருவதே ஜே.வி.பியின் திட்டமாக இருந்திருக்கக்கூடும். அதனால்தான் அவருக்கு அமைச்சு பதவிகூட வழங்கப்படவில்லை.

கனடாவில் இருந்து இலங்கை வந்த பார்சலில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கனடாவில் இருந்து இலங்கை வந்த பார்சலில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அவ்வாறு இல்லாவிட்டால் தென்மாகாண முதல்வர் வேட்பாளராக அவரை களமிறக்கும் உத்தேசமும் இருந்தது. தற்போது நிஹால் கலப்பதி அடுத்த சபாநாயகராக நியமிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக நபரொருவர் குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US