சித்தியை மணந்தாரா ஜனாதிபதி அனுர? சேறுபூசலுக்கு மத்தியில் மறைந்த மனிதநேய கதை
ஜனாதிபதி அனுரகுமார தனது சித்தியை திருமணம் செய்துள்ளார் என எதிர்க்கட்சிகள் சிலர் பரப்பி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் எடுத்துள்ள தியாகமும் அர்ப்பணிப்பும் குறித்த தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
தகவல்களின் அடிப்படையில், ஜனாதிபதி அனுரகுமார தனது சித்தியை அல்ல, மறைந்த தனது சகோதரரின் மனைவியையே திருமணம் செய்துள்ளார்.
இதனை சில தரப்பினர் திட்டமிட்டு திரிபுபடுத்தி, அவர் சித்தியை மணந்ததாக பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் தெரியவருவதாவது,
ஜனாதிபதி அனுரகுமாரின் தாயாரின் தங்கை மகன், சிறு வயதிலிருந்தே அவரது தாயாரிடமே வளர்ந்து வந்துள்ளார்.
இருவரும் ஒரே வயதுடையவர்களாகவும், ஒன்றாகவே அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர்களாகவும் இருந்துள்ளனர்.
காலப்போக்கில், அந்த சகோதரர் காதலித்து திருமணம் செய்துகொண்டு, குழந்தையுடன் குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்த நிலையில், அரசியல் பின்னணியில் இடம்பெற்ற வன்முறையொன்றில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், அவரது மனைவியும் குழந்தையும் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்த சூழ்நிலையில், மறைந்த சகோதரரின் மனைவிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பும் வாழ்க்கையும் வழங்க வேண்டும் என்ற நோக்கில், ஜனாதிபதி அனுரகுமார அவரை திருமணம் செய்து, ஒரு தியாகமான முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இது ஒரு மனிதநேயமான மற்றும் குடும்பப் பொறுப்புணர்வு கொண்ட செயல் என பலரும் குறிப்பிடுகின்றனர்.
ஆனால், இந்த உண்மை நிலையை மறைத்து, எதிர்க்கட்சிகள் சிலர் இதனை திரிபுபடுத்தி, ஜனாதிபதி தனது சித்தியை திருமணம் செய்ததாக பொய்யான தகவல்களை பரப்பி, அவதூறு செய்ய முயற்சிப்பது வருத்தமளிப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.