மீண்டும் களத்தில்... தோனி ரசிகர்களுக்கு மிகிழ்ச்சியான தகவல்!
சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவரான மஹேந்திர சிங் தோனி இன்னும் 10 நாட்களில் வலைப்பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக அணியின் நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஐபில் தொடருக்காக தோனி தற்போது தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் தொடர்ச்சியாக உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 22ஆம் திகதி ஐபிஎல் தொடர் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதனால் சிஎஸ்கே அணி தரப்பில் மார்ச் முதல் வாரத்தில் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்படும் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடக்கும் என்று தான் கூறியிருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலால் வேறு நாட்டில் ஐபிஎல் மாற்ற போவதில்லை என்றே ஏலத்தின் போது எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
ஏலத்தை பொறுத்தவரை டேரல் மிட்செல் மற்றும் முஷ்டாஃபிகுர் ரஹ்மான் இருவர் மட்டுமே எங்களின் திட்டத்தில் இருந்தனர். இருவரையும் எங்களால் வாங்க முடிந்ததால், சிஎஸ்கே அணிக்கு சிறந்த ஏலமாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.