இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் ஊடுருவிய நபரின் பாஜக தொடர்பு
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் பாதுகாப்பு மீறல் நடந்துள்ள நிலையில் அத்துமீறி நுழைந்தவர்களில் ஒருவர் மைசூரு தொகுதி பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பரிந்துரையில் வந்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கைதான இரண்டு இளைஞர்களில் ஒருவரின் அடையாளம் சாகர் சர்மா என தெரியவந்துள்ளது.
மற்றொருவர் பெங்களூரு விவேகனாந்தா பல்கலைக்கழத்தில் கணினி அறிவியல் பட்ட பொறியாளர் மனோரஞ்சன் தாஸ் எனத் தெரியவந்துள்ளது.
வெளியே கைதான பெண்களின் பெயர் நீலம் (42) அமோல் ஷிண்டே (25) எனத் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் பார்வையாளராக உள்ளே செல்வதற்கு குறிப்பிட்ட எம்பியின் பரிந்துரை கடிதம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்தக் கடிதத்தின் அடிப்படையிலேயே நுழைவுச் சீட்டு வழங்கப்படும். அவர்களுக்கு பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படும் மேலும் அடையாள அட்டைகளை சரிபார்க்கப்படும் அதன்பிறகுதான் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த அத்துமீறலில் ஈடுபட்ட இருவருக்கும் பரிந்துரை கடிதம் அளித்த மக்களவை உறுப்பினர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்நிலையில் சஹார் சர்மா என்பவருக்கு மைசூரு மக்களவையின் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பரிந்துரை கடிதம் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் ஒருவருக்கு பரிந்துரை கடிதம் வழங்கிய மக்களவை உறுப்பினர் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இவர் மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன் என்றும் இவர் ஒரு பொறியாளர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.