கொழும்பு உணவகம் ஒன்றில் இரு தரப்பினரிடையே மோதல்; காணொளியால் பகீர்!
கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் உணவகம் ஒன்றில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட தாமதம்
காணொளியில் சிலரின் மீது உணவகத்தின் ஊழியர்கள் கொடூரமாக தாக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன.
உணவு வாங்க உணவகத்திற்கு வந்த ஒரு குழுவிற்கும் அதன் ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.