இலங்கைக்கு விரைவில் வரவுள்ள சீன மக்கள்! மஹிந்தவுக்கு உறுதியளித்த தூதர்
சீன சுற்றுலாப் பயணிகள் விரைவில் இலங்கைக்கு வரத் தொடங்குவார்கள் என இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong இன்று முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு (Mahinda Rajapaksa) உறுதியளித்துள்ளார்.
இன்றைய தினம் (14-10-2022) சீனத் தூதுவர் மற்றும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது இருவரும் இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசிற்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கையும் சீனாவும் நட்பு, நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஆகியவற்றின் நீண்ட வரலாற்றைப் பகிர்ந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், ஆனால் நாடு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்புவதாகவும் தூதுவர் குய் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சவால்களை வெற்றிகொள்வதற்கு சீனாவின் உதவும் என அவர் உறுதியளித்துள்ளார்.