பேச்சுவார்த்தை நடத்த டக்ளஸ் தேவானந்தாவை அழைத்த சீ.வீ.கே.சிவஞானம்
உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைக்க கூட்டணியமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இலங்கை தமிழ் அரசு கட்சி உத்தியோகபூர்வமாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் (ஈ.பி.டி.பி) கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இந்த கோரிக்கையை, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்துள்ளார்.
நேற்று (3) இரவு 11.52 மணிக்கு சீ.வீ.கே.சிவஞானம் தனது தொலைபேசி SMS வழியாக இந்த வேண்டுகோளை விடுத்ததாக, ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தது.
நேற்று (3) இரவு யாழ்ப்பாணத்தை சேர்ந்த பத்திரிகையாளர் வித்தியாதரன் தன்னை தொடர்பு கொண்டு இலங்கை தமிழ் அரசு கட்சி உள்ளூராட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஆதரவளிக்குமாறு கேட்டுள்ளார்.
இதன்போது, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சித்தார்த்தன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் சுன்னாகம் பிரதேசசபையில் ஆதரவளிக்குமாறு கோரியதாக தெரிவித்ததாக டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.
எனினும், இன்று தனது பத்திரிகையில் தமிழ் தேசிய பேரவையுடனான கூட்டணி பேச்சை போல தோற்ற மயக்கம் ஏற்படும் விதமாக வித்தியாதரன் செய்தி வெளியிட்டிருந்தார்