2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் வெளியான தகவல்
2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை 2025 நவம்பர் 7 ஆம் திகதி நடத்தவும், பின்னர் நவம்பர் 8ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை விவாதத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பாதீட்டு சட்ட மூலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நிதிக்குப் பொறுப்பான அமைச்சராக, ஜனாதிபதி, 2025 நவம்பர் 7 ஆம் திகதி பாதீட்டு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பை நடத்துவார் என்றும், பின்னர் நவம்பர் 8 முதல் நவம்பர் 14 வரை 6 நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு விவாதத்தை நடத்துவார் என்றும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று(11) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.