2 பெண்களுடன் சிக்கிய பிக்குவால் வெடித்த சர்ச்சை; பலர் கைது
நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் போமிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு (07) கைதுசெய்யப்பட்டதுடன், ஏனைய 07 சந்தேகநபர்கள் இன்று (08) காலை நவகமுவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணொளியால் சர்ச்சை
இத்தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தேரர் ஒருவரையும், இரண்டு பெண்களையும் தாக்கி பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான காணொளி நபரொருவரால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இரு பெண்களுடன் ஒரே அறையில் இருந்த பிக்கு; நையப்புடைந்த பிரதேச மக்கள்
பெண்களுடன் உல்லாசத்தில் இருந்த தேரரை தாக்கிய நால்வர் கைது; அமைச்சரிடம் இருந்து பறந்த உத்தரவு
பெண்களுடன் சிக்கிய பிக்குவை தண்டிப்பதற்கு நீங்கள் யார்? கொதித்தெழும் பெளத்த பிக்கு! (Video)