சஹ்ரானின் மற்றுமொரு சகா கைது!
அடிப்படை வாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்ட சஹ்ரானின் மற்றுமொரு சகா கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மூதூர் இக்பால் வீதீயில் வைத்து பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்ட சஹ்ரான் ஹசீமின் கட்டளைகளுக்கு அமைய குறித்த நபர் அடிப்படை வாத வகுப்புகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட 38 வயதுடைய குறித்த நபர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்