ஒரே நாளில் 30,386 பேர் பரிசோதனை ; 596 பேர் கைது
பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று (16) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 30,386 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 596 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் 18 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 268 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 184 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 467 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 72 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் , பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,584 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.