அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள் விற்பனை ; 03 விற்பனை நிலையங்களுக்கு அபராதம்
அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர் விலையை விட அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்த மற்றும் விலைக் காட்சிப்படுத்தாத ஹெட்டிபொல பகுதியிலுள்ள 03 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த நிறுவனங்களுக்கு நீதிமன்றத்தால் தலா 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளையொன்றைக் கொள்முதல் செய்வதற்கு முன்னர் அதன் விலையைச் சரியாகப் பரிசீலிக்குமாறும், நுகர்வோரிடம் அநியாயமாகப் பணம் அறவிடும் அல்லது விலையைக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்கள் தொடர்பாக 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறும் நுகர்வோர் அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.