சூரிய பெயர்ச்சியால் ஜாக்கிரதையா இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இப்படி சூரியன் ராசியை மாற்றும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், 3 ராசிக்காரர்கள் ஏராளமான பிரச்சனைகளை நேரிடும்.

குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் தொழில், நிதி நிலை மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். இப்போது செப்டம்பர் 17 ஆம் திகதி நடக்கும் சூரிய பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பேசும் விதம் சற்று கடுமையானதாகவோ அல்லது முரட்டுத்தனமாகவோ இருக்கலாம். இது உறவுகளில் பிரச்சனைகளை அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் எந்த ரிஸ்க்கையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உடன் வேலை செய்வோருடன் பிரச்சனைகள் எழலாம். உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண், தொண்டை பிரச்சனைகள் தொந்தரவு செய்யலாம்.

கும்பம்
கும்ப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மறைமுக எதிரிகளால் நிறைய பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. எனவே இக்காலத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். நீதிமன்ற விஷயங்களில் பல தடைகளை சந்திக்க நேரிடும்.

மீனம்
மீன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்து வந்தால், கூட்டாளருடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். வணிகர்கள் எந்த ஒரு புதிய ஒப்பந்தங்களையும் ஏற்றுக்கொள்ளும் முன் கவனமாக சரிபார்க்க வேண்டும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்
