நண்பர்கள் விருந்துபசாரத்திற்கு சென்ற இளம் குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு
திருகோணமலை - போதீஸ்புர பிரதேசத்தில் நண்பர்களுடன் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டிருந்த இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணை
சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை மகமாயபுர பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆர்.பி.பிரதீப் கெலும் (வயது-34) எனவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபர் நேற்றைய தினம் நண்பர்களுடன் விருந்துபசாரத்தில் கலந்துக்கொண்ட நிலையில் , நள்ளிரவு வேளை சடலமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.