திறைசேரி அதிகாரியின் மரணம் ; நீதிமன்றில் வழங்கப்பட்ட பரபரப்பு சாட்சியங்கள்

Udaya Gammanpila Crime Court of Appeal of Sri Lanka
By Sahana May 21, 2026 12:23 AM GMT
Report

நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் செயற்பாட்டு பணிப்பாளராகப் பணியாற்றி, பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்த ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை நேற்று (20) குளியாபிட்டிய நீதவான் மிஹில் சிரந்தன சதரசிங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனை கட்டாயம் ; சுகாதார அமைச்சு அவசர வேண்டுகோள்!

திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனை கட்டாயம் ; சுகாதார அமைச்சு அவசர வேண்டுகோள்!

இதன்போது மரணமடைந்தவரின் மனைவி, மகள் உள்ளிட்ட குழுவினரும், பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவும் சாட்சியமளித்தனர்.

வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹணவினால் வழக்கின் சாட்சியங்கள் வழிநடத்தப்பட்டன.

உயிரிழந்தவரின் மனைவியான நிஸ்சங்க ஆராச்சிலாகே சீலவதி சாட்சியமளிக்கையில், கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி தாம் பாடசாலைக்குச் சென்றுவிட்டு முற்பகல் 10.50 அளவில் மீண்டும் வீட்டிற்கு வந்ததாகக் குறிப்பிட்டார்.

திறைசேரி அதிகாரியின் மரணம் ; நீதிமன்றில் வழங்கப்பட்ட பரபரப்பு சாட்சியங்கள் | Death Treasury Official Evidence Presented Court

அந்த நேரத்தில் கணவர் வீட்டில் இல்லாததால், குடும்ப நண்பரான உதய மற்றும் தோட்டத்தில் வேலை செய்த ரணவீர ஆகியோருடன் இணைந்து தேடியதாகக் கூறினார்.

பின்னர் வெற்றிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த கருணா என்பவர் கணவர் தோட்டத்தின் நடுவே விழுந்து கிடப்பதாகத் தகவல் தந்ததாகவும், அங்கு சென்றபோது அவர் விழுந்து கிடந்ததைக் கண்டதாகவும் குறிப்பிட்டார்.

பின்னர் 1990 அவசர நோயாளர் காவுவண்டி சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் வந்து சோதித்து அவர் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

சான்று பொருட்களாக நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்ட கணவரின் ஆடைகள், காலணிகள் மற்றும் காய்கறி வெட்டுவதற்குப் பயன்படுத்தும் கத்தி ஆகியவற்றை அவர் அடையாளம் காட்டினார்.

ஊடகங்கள் வாயிலாக எழுப்பப்படும் பல்வேறு கேள்விகள் தங்களுக்கு பெரும் மனவேதனையை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட மனைவி, தனது கணவரின் மரணம் குறித்து எந்தவொரு இடத்திலும் தாம் சந்தேகம் எழுப்பவில்லை என்றும், தற்போதும் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகக் கூறினார்.

திறைசேரி அதிகாரியின் மரணம் ; நீதிமன்றில் வழங்கப்பட்ட பரபரப்பு சாட்சியங்கள் | Death Treasury Official Evidence Presented Court

இதனிடையே, உயிரிழந்தவரின் மகள் சாட்சியமளிக்கையில், அன்றைய தினம் தாம் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் எவ்வித சத்தமும் கேட்கவில்லை என்றும், தந்தை முந்திரி பழம் பறிப்பதற்காகத் தோட்டத்தின் கீழ் பகுதிக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார் என்றும் குறிப்பிட்டார்.

மரணமடைந்தவரை முதன்முதலில் பார்த்த கருணாவதி சாட்சியமளிக்கையில், வழக்கமாக வெற்றிலை பறிக்கும் பக்கத்தில் அல்லாமல் தோட்டத்தின் மறுபக்கத்தில் வேலை செய்துகொண்டிருந்ததால் தாம் எதையும் பார்க்கவில்லை என்றும், பின்னர் நடந்து சென்றபோது ரங்க தோட்டத்தின் நடுவே விழுந்து கிடப்பதைக் கண்டு கூச்சலிட்டதாகவும் கூறினார்.

இதனிடையே, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவிடம், இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினாரா என்று காவல்துறை தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த கம்மன்பில, தாம் அவ்வாறான ஒரு கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவில்லை என்றும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவக் குழுவொன்றை நியமித்து அனுப்பப்பட்ட கடிதத்தில் "மனைவி சந்தேகம் தெரிவிப்பதால் நியமிக்கப்படுகின்றது" எனக் குறிப்பிடப்பட்டிருந்த பகுதியை மட்டுமே தாம் ஊடகங்களுக்குச் சுட்டிக்காட்டியதாகக் கூறினார்.

தன்னிடம் விசாரிப்பதற்குப் பதிலாகச் சுகாதார பணிப்பாளர் நாயகத்திடம் அது குறித்துக் கேட்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திறைசேரி அதிகாரியின் மரணம் ; நீதிமன்றில் வழங்கப்பட்ட பரபரப்பு சாட்சியங்கள் | Death Treasury Official Evidence Presented Court

அரச அதிகாரிகளுக்கு ஊடகங்களுக்கு நேரடியாக கருத்து தெரிவிக்க முடியாத உணர்வுப்பூர்வமான இரகசியத் தகவல்களை, அவர்கள் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மூலம் வெளிப்படுத்துவது வழக்கம் என்றும், தனக்கும் நம்பகமான அரச அதிகாரிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே அந்த ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

திறைசேரியில் 80 கோடி ரூபாய் காணாமல் போனமை தொடர்பாக முதன்முதலில் முறைப்பாடு செய்தது மரணமடைந்தவரே என ஆரம்பத்தில் தகவல் கிடைத்த போதிலும், பின்னர் அது அவர் இல்லை என்பது உறுதியானதும் அது குறித்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தித் தெளிவுபடுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இங்கு உதய கம்மன்பில சார்பில் சட்டத்தரணி அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் முன்னிலையாகியிருந்தனர்.

மேலதிக சாட்சியங்களை விசாரணை செய்வதை எதிர்வரும் ஜூன் மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினம் சாட்சியாளர்களை முன்னிலைப்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.

அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US