தீவகப்பகுதிக்கு வடமாகாண ஆளுநர் விடுத்த பணிப்புரை
யாழ்.தீவு பகுதியில் கூட்டுறவுத்துறையை முன்னேற்றுவதற்காக கட்டிட நிர்மாண பணிகளுக்கான பொருட்களை கூட்டுறவு சங்கங்கள் ஊடாக விற்பனை செய்யுமாறு ஆளுநர் ஜீவன் தியாகராஜா அறவுறுத்தியுள்ளார்.
தீவகத்தில் செய்யப்பட்ட பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் கட்டட நிர்மாண பொருட்களை விற்பனை செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலணை, ஊர்காவற்துறை, காரைநகர், புங்குடுதீவு ஆகிய பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் குறித்த பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 5ஆம் திகதி வேலணை காரைநகர் 6ஆம் திகதி ஊர்காவற்துறை அதனைத் தொடர்ந்து புங்குடுதீவு, நயினாதீவிலும் செயல்படுத்தப்பட வுள்ளது.
எனவே கூட்டுறவுத்துறை மூலம் தீவிரத்தை அநிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.