மகளிர் ஆசிய கிண்ணம் ; இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இலங்கை மகளிர் அணி
மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
ஜனாதிபதிக்கு எதிர்ப்பு ; தேசியக் கொடியுடன் போராட்டத்தில் குதித்த பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்
டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி சார்பில் அணியின் தலைவி Fatima Sana ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இலங்கை மகளிர் அணி சார்பில் Chamari Athapaththu மற்றும் Chamudi Praboda தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை மகளிர் அணி சார்பில் Harshitha Samarawickrama அதிகபட்சமாக 36 ஓட்டங்களையும், Kavisha Dilhari 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் மகளிர் அணி சார்பில் Fatima Sana 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதற்கமைய இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.