ஆயுத பூஜை அன்று குடித்ததால் கணவனை அடித்து கொன்ற மனைவி
இந்தியாவின் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தில் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கிய பின் மீதம் இருந்த பணத்தில் மது குடித்த கணவர் மனைவி அடித்து கொன்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்த சம்பவத்தில் 36 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். அவ்வாறு மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போதெல்லாம் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கொடுத்த பணத்தில் பூஜை பொருட்களை வாங்கிய பின் மீதம் இருந்த பணத்துக்கு அவர் குடித்துள்ளார்.
அந்த பணத்தில்தான், தனது கணவர் மதுகுடித்து விட்டு வந்ததை அறிந்து கொண்ட மனைவி அவருடன் வாக்குவாதம் ஈடுபட்டு குடத்தால் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த வைத்தியர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனை பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்ததில் மனைவி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.