உலகின் மிக விலை உயர்ந்த அரிசி ; ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?
உலகின் மிக விலை உயர்ந்த அரிசி ஜப்பானில் விளைவிக்கப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோ கிராம் ரூ.12,500 ஆக உள்ளது.
தெற்காசியாவில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு மொழி, வரலாறு, உணவு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் உள்ளது.

என்றாலும் இந்த நாடுகளிடையே பொதுவான விஷயமாக அரிசி உள்ளது. ஒவ்வொரு நாடும் தனித்துவமான அரிசி வகைகளை உற்பத்தி செய்கின்றன.
இவை பெரும்பாலும் எல்லோராலும் வாங்கக் கூடிய விலையிலேயே கிடைக்கின்றன. என்றாலும் ஜப்பானின் கின்மேமை பிரீமியம் அரிசி ஒரு ஆடம்பர பொருளாக விளங்குகிறது.
டோயோ ரைஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதை உற்பத்தி செய்கிறது. இந்த அரிசி 6 மாதங்கள் பதப்படுத்தப்பட்டு சுவை கூட்டப்படுகிறது.
கடந்த 2016-ல் மிகவும் விலை உயர்ந்த அரிசியாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இந்த அரிசி இடம் பெற்றுள்ளது.
வழக்கமான அரிசியை சமைப்பதற்கு முன் அதை இரண்டு முறை கழுவி, சற்றுநேரம் ஊறவைக்க வேண்டும்.